தீவிரவாதம்
மே 30, 2008 at 2:24 முப பின்னூட்டமொன்றை இடுக
சொல்லவே நா கூசுகிறது. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே இன்று இந்த தீவிரவாதப்பேய் தலைவிரித்து ஆடிக்கொண்டுதானிருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பார்வையற்ற முதியவர்வரை எத்தனையோ உயிர்களை காவு வாங்கிக்கொண்டுதானிருக்கிறது தீவிரவாதம். குறிப்பாக இந்தியாவில்….கேட்கவே வேண்டாம். இந்திய நிலமை எல்லோருக்குமே தெரியும். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் 70 பேருக்குமேல் பலியாகினர். இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? சில தீவிரவாதிகள் 100 பேரைக் கொன்றுவிட்டு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிடுகின்றனர். இது எப்படி? இப்படி நாடு முழுவதும் தீவிரவாதம் கொழுந்துவிட்டு எரிய, அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்க்கிறது? அரசால் இவர்களை அடக்க முடியாதா? அல்லது அடக்க வேண்டாம் என்பது எழுதப்படாத சட்டமா?ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப் பிச்சை கேட்டு வீடு வீடாய் வரும் அரசியல்வாதிகள், மக்களுக்குத்தரும் பாதுகாப்பு இதுதானா? இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்? தேசப் பற்றுள்ளவர்கள் வழி சொல்லுங்கள். இனியாவது இந்தியாவைக் காப்பாற்ற முயல்வோம்.
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed